25 வருசமா குடும்பத்த கூட பாக்காம நாய் மாதிரி ஒழைச்சேன், ஆனா இப்போ -கொடிகட்டி பரந்த சினிமா பிரபலத்தின் பரிதாப நிலை.

0
977
Rajarajan
- Advertisement -

25 வருடமாக சினிமாவில் பணியாற்றியும் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கேமராமேன் ராஜராஜன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ராஜராஜன் என்கிற பாண்டியன். இவர் ராஜாதிராஜா, மெல்லதிறந்தது கதவு, நான்பாடும் பாடல், அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இவருடைய ஒளிப்பதிவிற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கையால் விருது வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த இவரைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. சொல்லப்போனால் கூகுளில் தேடினால் கூட கிடைக்கவில்லை. ஆனால், திரைப்படங்களின் விவரங்களில் இவருடைய பெயர் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரை பற்றி சமீபத்தில் பிரபல சேனல் பேட்டி எடுத்து இருந்தது. அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறியிருந்தது, நான் வாகினி ஸ்டூடியாவில் கேமரா உதவியாளராக சென்று இருந்தேன். எனக்கு மிகப்பெரிய கேமராமேன் , ஜாம்பவான் பாலு மகேந்திரா படங்களில் உதவியாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஒளிப்பதிவாளர் ராஜராஜன் அளித்த பேட்டி:

அவர் பந்தா, பகட்டு ஏதும் இல்லாத நபர். அவரின் படத்திற்கு பின் தொடர்ந்து எனக்கு தனியாக ஒளிப்பதிவாளராக படம் பண்ணுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் பண விஷயத்தில் பெரிதாக டிமாண்ட் செய்ய மாட்டேன். இதனால் எனக்கு பணத்தை ஒழுங்காக வாங்க தெரியாது என்று இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன் அடிக்கடி சொல்வார். அது அப்படி அல்ல. நான் உழைக்கும் உழைப்பு பற்றி தயாரிப்பாளர்களுக்கு நன்றாகவே தெரியும். பிறகு நான் எதற்கு சென்று சம்பளத்தை கேட்டு பெற வேண்டும்? நான் என்ன பிச்சையா எடுக்கிறேன்? செய்த உழைப்புக்கான ஊதியம் தரவேண்டும் என்பது அவர்களுக்கே தெரிய வேண்டும். இப்போது வரை எனக்கு நான் பணிபுரிந்த எந்த படத்திலும் செட்டில்மெண்ட் கிடைத்ததில்லை.

சம்பளம் குறித்து ராஜராஜன் சொன்னது:

அட்வான்ஸ் மட்டுமே கொடுத்தார்கள். படம் நன்றாக ஓடினாலும் கூட அதற்கான முறையான முழு ஊதியம் எனக்கு கிடைத்தபாடில்லை. அதேபோல் அம்மன் கோயில் கிழக்காலே என்கிற ஒரு படத்துக்கு எனக்கு 15,000 பேசினார்கள். படம் நன்றாக இருந்ததாக அனைவரும் கூறினார்கள். ஆனால், எனக்கு இன்னும் அந்த படத்திற்கான செட்டில்மெண்ட் வரவில்லை. சினிமாவின் நிலைமை இது தான். அனைவருக்கும் கொடுத்து விடுவார்கள். ஆனால், போட்டோகிராஃபருக்கு கடைசிவரை பேமெண்ட் கொடுக்க மாட்டார்கள். பாக்கி வைத்து திருப்பி அனுப்பி விடுவார்கள். அதே நிலைமை தான் சினிமா கேமராமேனுக்கும் இருக்கிறது. 25 வருடம் சினிமாவில் கண்மூடித்தனமாக இரவு பகலாக உழைத்தேன். சில சமயம் அடிபட்டிருக்கிறது.

-விளம்பரம்-

கேமரா மேன் அனுபவம்:

கேமரா முகத்தில் விழுந்து பல் உடைந்திருக்கிறது. வீட்டுக்கு போன நாட்களே மிக குறைவு. என் பிள்ளைகள் என்னை அந்நியராகவே தான் பார்த்தார்கள். ஒரு சில சமயத்தில் என்னை அவர்கள் ராட்சசன் போல் பார்ப்பார்கள். ஏனென்றால், நான் வீட்டில் இருப்பதில்லை. பெரும்பாலான நேரம் சினிமாவில் பரபரப்பாக பொழுதை கழித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் நாய் மாதிரி வள் வள் என்று விழுவேன். அந்த காலத்தில் நாங்கள் இதுபோன்ற கூகுளில் வரும் பெயர்களுக்கெல்லாம் விரும்பவில்லை. மன நிறைவாக பணி செய்வோம். நான் பணிபுரிந்த பல முன்னணி நடிகர்களும் தங்கமானவர்கள். விஜயகாந்த் சார் அப்படித்தான். எனக்கு அவர் மிகவும் நெருக்கம். நல்ல மனிதர். பிரபு சார் மிகவும் அன்பானவர்.

தற்போதைய நிலை:

ஒரு முறை பாண்டித்துரை என்கிற திரைப்படத்தின் படப்பிடிப்பில் தலைப்பா கட்டி பிரியாணி நிறுவன ஊழியர்கள் வந்து சமைத்து எங்களுக்கு பிரியாணி கொடுத்தார்கள். அந்த அளவுக்கு அன்பு மிக்கவர் பிரபு சார். அனைவரையும் மச்சான் என்று அழைக்கக்கூடிய பாங்கு அவருடையது. அப்படியான மனிதர்களுடன் பணிபுரிந்த நினைவுகளால் தான் நாங்கள் இன்றும் ஆரோக்கியமாக இருக்கிறோம். இப்போது அந்த காலத்தை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம். அதுதான் பொற்காலம். இப்போது இன்னும் நேர்மை குறைந்து இருப்பதாகவே தோன்றுகிறது. இப்போது எனக்கு எதுவும் வேண்டாம். திரும்பவும் பணிபுரியும் எண்ணம் இல்லை. நான் என் குடும்பத்துடன் மதுரை அலங்காநல்லூரில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறி இருந்தார்.

Advertisement