திருமணம் ஆன நாளே மாதங்களில் குழந்தை பிறந்து விட்டதாக சூப்பர் ஹீரோயினி – நயன்தாராவை சீண்டிய கிருஷ்ணசாமி.

0
283
krishnasamy
- Advertisement -

நயன் – விக்கியின் வாடகைக்கு தாய் குழந்தை குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்திருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் இரட்டைக் குழந்தைகள் குறித்த சர்ச்சை தான் வைரலாகி கொண்டு வருகிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் எதிர்பார்த்து காத்து இருந்த விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

-விளம்பரம்-

அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக ஹனி மூன் சென்று இருந்தனர். தற்போது இருவருமே படங்களில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இரட்டை குழந்தை பெற்ற நயன்:

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டது, நயன்தாராவும், நானும் அம்மா- அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசிர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசிர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கிறது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதம் எங்களுக்காக வேண்டும் என்று கூறியிருந்தார். விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள்.

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்:

இருந்தாலும், பலர் கல்யாணம் முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில் எப்படி நயன்தாரா குழந்தை பெற்றார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பின் நயன்-விக்கி வாடகை தாய் மூலம் தான் குழந்தை பெற்று இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து நயன்-விக்கி தரப்பில் இருந்து எதுவும் கூறவில்லை. தற்போது சோசியல் மீடியாவில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் இரட்டை குழந்தை குறித்த சர்ச்சை தான் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

நயன் குழந்தை குறித்த சர்ச்சை:

இது குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் இது குறித்து சமீபத்தில் அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் பேட்டி ஒன்றில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் பெற்றிருக்கும் குழந்தை விதிமுறைக்குட்பட்டதா? என்பதை மருத்துவத் துறையினர் மூலம் பரிசீலனை செய்யப்படுகிறது என்று கூறியிருந்தார். அதோடு சிலர் விக்கி-நயனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பதிவு:

அதில் அவர் கூறியிருப்பது, சிதம்பரத்தில் பள்ளி சிறுவர்கள் சீருடையில் ஹீரோயிசைத்தை காட்டும் விதமாக தாலி கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவால் தான் தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீர்கெடுகிறது. திருமணம் ஆன நாளே மாதங்களில் குழந்தை பிறந்து விட்டதாக சூப்பர் ஹீரோயினி அறிவித்து இருக்கிறார். சினிமாவை அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ் சினிமாவால் தான் தமிழ் இளைஞர்கள் கலாச்சாரம், பண்பாடு அழிக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

Advertisement