இயக்குனர் கௌதம் மேனனின் மகன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் நெல்லை அணிக்காக அறிமுகமாகி இருக்கிற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார்.
அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். தற்போது இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்நிலையில் கௌதம் மேனன் மகன் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் இணைந்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டிஎன்பிஎல் தொடர்:
தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் நோக்கத்தில் டிஎன்பிஎல் நடைபெற்று வருகிறது. இந்த டிஎன்பிஎல் தொடர் கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதி இருந்தார்கள். இந்த போட்டியில் நெல்லை அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றிருந்தார்கள். இவர்களின் இந்த வெற்றிக்கு ஆர்யா யோஹன் மேனன் தான் முக்கிய காரணமாக இருந்தார்.
கௌதம் மேனனின் மகன்:
இவர் வேற யாரும் இல்லைங்க, பிரபல தமிழ் திரையில் இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்யா யோஹன் மேனன் சிறப்பாக பந்து வீசி தன்னுடைய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார். அதோடு இவர் 3 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். மேலும், ஒரு ரன் அவுட்டும் செய்தார். அதிலும் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான ஆர்யாயோஹன் பவர்ப்ளேவில் மிகவும் அட்டகாசமாக பந்து வீசினார்.
வெற்றி பெற்ற நெல்லை அணி:
அவர் பவர்ப்ளேவில் மட்டும் 2 ஓவர்கள் வீசி 15 ரன்களே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆனால், தற்போது இவருக்கு 19 வயது தான் ஆகிறது. இவர் லைன் மற்றும் லென்த்தில் மிகவும் அற்புதமாக பந்துவீசி எதிரணிக்கு பயங்கர நெருக்கடி கொடுத்து இருந்தார். இவருடைய பந்துவீச்சில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் திக்குமுக்காடி இருக்கின்றனர்.நெல்லை அணிக்காக நேற்று தனது முதல் டி.என்.பி.எல். போட்டியில் ஆடி இருந்தார் ஆர்யயோஹன்.
வாழ்த்துக்கள் தெரிவிக்கும் ரசிகர்கள்:
மேலும், வெற்றி பெற்ற நெல்லை அணிக்கும், நெல்லை அணிக்காக அறிமுகப்போட்டியில் களமிறங்கிய கவுதம் மேனன் மகன் ஆர்யாயோஹன் மேனனுக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல கெளதம் மேனன் விஜய்யை வைத்து யோஹன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தார். அந்த படம் கைவிடப்பட்டது. மேலும், இவரது மகன் பெயரை தான் அந்த படத்திற்க்கு கெளதம் மேனன் வைத்து இருக்கிறார்.