மறைந்த நடிகர் ஜெய் ஷங்கரின் கனவை நிறைவேற்றிய அவரின் டாக்டர் மகன் – குவியும் பாராட்டுக்கள்

0
1802
- Advertisement -

மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் கனவை அவருடைய மகன் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை உருவாக்கி கொண்டு தனக்கென்ற பாதையில் சினிமாவில் வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

மேலும், இவர் படங்களில் பல வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவரும் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகருக்கு இணையாக மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரை மக்கள் கலைஞர் என்றுதான் அழைத்தார்கள். காரணம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருடைய நடிப்பில் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.

- Advertisement -

ஜெய்சங்கர் திரைப்பயணம்:

அந்த அளவிற்கு பிஸியான நடிகராக வலம் வந்தார் ஜெய்சங்கர். மேலும், இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி இருந்தார். மேலும், இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து கொடுத்து இருக்கிறார். இப்படி ஒரு உன்னதமான நடிகர் ஜெய்சங்கர் 2000 ஆம் ஆண்டு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஜெய்சங்கர் மகன்கள்:

அதில் ஒரு மகன் தன் தந்தையை போல் சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்னொரு மகன் விஜய் சங்கர் தன்னுடைய தந்தையின் ஆசைப்படி கண் மருத்துவராக இருக்கிறார். மேலும், ஜெய்சங்கர் அவர்கள் உயிரோடு இருக்கும் காலங்களில் இலவசமாக பலமுறை கண் சிகிச்சை முகாம் நடத்தி இருக்கிறார். அதேபோல் இவர் மகனும் உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரபலமான கண் மருத்துவர் ஆக திகழ்கிறார்.

-விளம்பரம்-

விஜய் சங்கர் புதிய கிளினிக்:

இவர் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலவச கண் ஆபரேஷன் செய்து முடித்திருக்கிறார். இது குறித்து கூட சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்று அளித்திருந்தார் விஜய் சங்கர். இந்த நிலையில் தற்போது இவர் புதிய கிளினிக் ஒன்றை திறந்து இருக்கிறார். தன்னுடைய தந்தையின் நினைவாக இவர் இந்த மருத்துவமனையை திறந்திருக்கிறார். இது தொடர்பாக பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

குட்டி பத்மினி பதிவு:

மேலும், இந்த புதிய கிளினிக் திறப்பு விழாவில் குட்டி பத்மினி கலந்து கொண்டு இருக்கிறார். பின் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, டாக்டர் விஜய் சங்கரின் புதிய கிளினிக் திறப்பு விழாவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் பெரும் வெற்றியையும் செழிப்பையும் பெற வாழ்த்துக்கள். அது மட்டும் இல்லாமல் நீங்களும் உங்கள் அப்பாவைப் போல பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement