‘விடுடா பார்த்துக்கலாம்னு சொன்னேன் இறப்பிற்கு முன் ஹரியுடன் பேசியது குறித்து கண்கலங்கிய காற்றுக்கென்ன வேலி “டயானா”

0
754
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “காற்றுக்கென்ன வேலி” சிரியலில் கதாநாயகி வெணிலாவின் காலேஜ் நண்பராக தமிழ் என்ற கதாபாத்திரத்தில் கானா பாடகர் ஹரி நடித்திருப்பார். இவர் பல நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் பாண்டியன் திருமணத்தன் போது பாடப்பட்ட பாடல் கூட இவர் பாடியதுதான். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

-விளம்பரம்-

காற்றுக்கென்ன வேலி டயானா :

இவரின் மறைவுக்கு அவருடய சக நடிகர்கள் ஹரியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவரும் நிலையில “காற்றுக்கென்ன வேலி” சீரியலில் ரூபா என்ற கதாபாத்திரத்தில் நடித்த டயானா தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் ஹரி தற்கொலை செய்து கொள்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனக்கு போன் செய்ததாக கூறினார் “ஷரிஷும் நானும் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நெருக்கமாக இருப்போம். ஆனால் வெளியில் அந்த நட்பு கிடையாது. ஹரி மூன்று மாதத்திற்கு முன்னரே தற்கொலை முயற்சி செய்தார்.

- Advertisement -

3 நாட்களுக்கும் முன்னர் போனில் பேசினான் :

காற்றுக்கென்ன சீரியலில் இருந்து எங்களை தூக்கி விட்டனர். ஏன் நீக்கினார்கள் என்று தெரியாமல் நாங்கள் குழப்பத்தில் இருந்தோம். நான் பெரிதாக மற்றவர்களிடம் பேட்டி கொடுக்க மாட்டேன் ஆனால் ஹரி இறப்பதற்கு முன்னர் எனக்கு போன் செய்து பேசினான். அந்த குற்ற உணர்வில் தான் இப்போது பேட்டி கொடுக்கிறேன். அப்படி போன் செய்த ஹரிஷ் “தவமாய் தவமிருந்து” சீரியலில் பெரிதாக பிரபலம் கிடைக்கவில்லை, எதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க என்று கூறினான். நான் படங்களில் நடித்து கொண்டிருந்ததால் வாய்ப்பு கிடைத்தால் சொல்கிறேன் என்று ஆறுதல் கூறினேன்.

அவர்கள் யாரையும் வேண்டுமாலாலும் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். அவர்கள் மீது நாம் குற்றம்சாட்ட முடியாது. அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அது எங்களை உச்சிக்கு கொண்டு சென்று திடீரென கீழே போட்டுவிட்டனர். அவர்களும் பாவம் கஷ்டப்பட்டு முன்னேறி வந்து இந்த வேலையை உயிராக நினைத்தவர்களுக்கு வேறு வேலைக்கு போக முடியாது.

-விளம்பரம்-

ஹரிக்கு எந்த கொட்ட பழக்கமும் கிடையாது. நல்ல பையன் , வெற்றி , தோல்வி இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பானை அவனிடம் இருந்தது. என்னை “காற்றுக்கென்ன சீரியலில்” இருந்து நீக்கிய பிறகு எனக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன், பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை செய்து கொண்டிருக்கும் போதே எனக்கு மீண்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வேலைக்கு போனால் நல்ல வருமானம் அதே நடிக்க போனால் குறைவான வருமானம் தான். இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க வந்துவிட்டேன். ஆனால் ஹரியால் என்னை போன்று மாற முடியவில்லை. அவனிடம் பல திறமைகள் இருந்தது. கண்டிப்பாக பெரிய நட்சத்திரமாக வர வேண்டும் என்று போராடி கொண்டே இருந்தான். ஆனால் இப்போது இப்படி விபரீதமான முடிவு எடுத்துவிட்டான் என்று கலங்கினார் டயானா.

Advertisement