பத்மாவதி என்னும் வரலாற்றுத் திரைப்படத்தில் ராணி பத்மாவதியாக நடித்திருப்பவர் தீபிகா படுகோன். இந்த திரைப்படத்தை பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இவர் தற்போது வரை 4 தேசிய விருதுகளை வாங்கியுள்ளார். இதற்கு முன் பாலிவுட்டில் வந்த ‘பாஜிராவ் மஸ்தாணி படத்தையும் இவர் தான் இருக்கினார்.
ஆனால் தற்போது இயக்கியிருக்கும் படத்தில் ராணி பத்மாவதியின் வரலாற்றை மாற்றிக் காட்டியிருப்பதாகக் கூறி பல இந்து மத அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதில் இரு அமைப்பு பத்மாவதியாக நடித்த தீபிகா படுகோனின் தலையைக் கொண்டு வந்தால் 1 கோடி பரிசு எனவெல்லாம் அறிவித்துள்ளது.
இதனால் பல நடிகர் நடிகைகளும், தீபிகா படுகோனிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த லிஸ்ட்டில் தற்போது கமலும் சேர்த்துள்ளார். தனது பாணியில் ட்வீட் செய்துள்ள உலகநாயகன்,
“எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்கமுடியாது என்று கூறியுள்ளார்.”