கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் குறித்த சர்ச்சை, ஹீரோயினி மீது தயாரிப்பாளர் அளித்த புகார்- பின்னணி இது தான்

0
461
- Advertisement -

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் நடிகை மனிஷா மீது தயாரிப்பாளர் புகார் அளித்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் புதுபுது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஒளிபரப்பான தொடர் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த தொடர் 100 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகியாக நடிகை மனிஷா நடித்து வருகிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, கம்பீரம் படத்தில் சரத்குமாரின் மகளாக மிரட்டி இருப்பார்.

-விளம்பரம்-

இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். பின் நடிகையாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் கண்ணத்தில் முத்தமிட்டால் சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்படி ஒரு நிலையில் திடீரென்று இவர் சீரியல் இருந்து வெளியேறிவிட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக மனிஷாவிடம் கேட்டிருந்த போது அவர் கூறியிருப்பது, இந்த தொடரில் நடிக்க தொடங்கியதில் இருந்தே எனக்கு சம்பள பாக்கி பிரச்சனை.

- Advertisement -

கன்னத்தில் முத்தமிட்டால் சீரியல் நடிகை:

இருந்தாலும், கோவிட் சமயத்தில் கூட லீவு போடாமல் நான் நடித்துக் கொடுத்தேன். நான் சம்பளத்தை கேட்கும்போதெல்லாம் சேனலில் இருந்து பணம் வரல என்று தான் சொல்லுவார் தயாரிப்பாளர். இந்தக் காரணத்தைச் சொல்லி எனக்கு தவணை முறையில் தான் சம்பளம் தந்தார். ஆனால், ரெஸ்ட் இல்லாமல் நான் நடித்துக் கொண்டு இருந்தேன். இதனால் எனக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது. ஒரு முறை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தேன். அந்த செலவுக்கு ரொம்பவே சிரமப்பட்டேன். அப்போ கூட என்னுடைய சம்பளத்தை தந்து எனக்கு உதவவில்லை தயாரிப்பாளர்.

மனிஷா அளித்த பேட்டி:

அதேபோல் ஷூட்டிங்குக்கு போகும்போது செட்டில் பாதுகாப்பு இருக்காது. காலை 9 மணியிலிருந்து நைட் 9 மணி வரை சூட் என்று சொல்வார்கள். ஆனால், ராத்திரி பதினோரு மணி வரைக்கும் கூட ஷூட்டிங் போகும். என்னால எந்த இடத்திலும் சூட்டிங் பாதிக்கப்படவில்லை. 103 டிகிரி காய்ச்சலில் கூட மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தும் மெயில் பண்ணி மறுநாள் சூட்டிங்க்கு வர சொல்லியிருந்தார்கள். அப்போ கூட நான் என் உடல் நிலையை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்தேன். என அசிஸ்டண்டிற்கு கொடுக்க வேண்டிய டேட்டா, வந்துபோகும் கேப் செலவு என்று எதுவுமே அவர்கள் பணம் கொடுக்கவில்லை.

-விளம்பரம்-

மனிஷா அளித்த புகார்:

மொத்தம் எனக்கு 6 லட்சம் ரூபாய் சம்பள பாக்கி இருக்கு. இதனால்தான் சீரியலை விட்டு விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். இதனையடுத்து தற்போது சீரியலின் தயாரிப்பு தரப்பிலிருந்து மனிஷா மீது சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தந்து இருக்கிறார்கள். அதில் அவர்கள், சம்பளம் தாமதமாகத் தருவது தவிர்க்க முடியாத சூழலில் நடப்பதுதான். ஆனால், எல்லோருக்கும் அவங்களுக்கு பேசிய சம்பளத்தை தந்து விடுவோம். அப்படியே சம்பள பிரச்சனை இருந்தால் சீரியல் தயாரிப்பாளர் சங்கத்தில் அல்லது அவங்க உறுப்பினராக இருக்க நடிகர் சங்கத்தில் முறையிட்டு பேசி இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு மீடியாவில் அந்த பொண்ணு பேட்டி கொடுத்தது ரொம்ப தப்பு. அதுவும் செட்டில் பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்த புகார்:

அது தயாரிப்பு நிறுவனம் மீது போடும் அபாண்டமான குற்றச்சாட்டு. இந்த சீரியலில் இவங்க மட்டும் நடிக்கவில்லை. டெக்னீசியன் உட்பட 100 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால், இவர்கள் மட்டும் தான் இப்படி ஒரு அவதூறை சொல்லியிருக்கிறார்கள். அதேபோல் செட்டில் பாதுகாப்பு இல்லை என்றால் தயாரிப்பாளர் தினமும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து போகும் போது அவரிடம் இதை சொல்லி இருக்கலாம். இதுவரை ஒருமுறை கூட அந்த பொண்ணு அப்படி சொன்னது இல்லை. இது தவிர இவர்கள் மீது தயாரிப்பு தரப்பில் இருந்தும் நிறைய புகார் சொல்லலாம். சூட்டிங் நேரத்திற்கு வருவதில்லை. இவர்களால் தயாரிப்பு தரப்புக்கு நிறைய நஷ்டம் உண்டாகி இருக்கு என்று பல காரணங்களை தயாரிப்பு தரப்பிலிருந்து முன்வைத்திருக்கிறார்கள்.

சீரியலின் தயாரிப்பாளர் பிரபு கூறியது:

இதனையடுத்து சீரியலின் தயாரிப்பாளர் பிரபுவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் நான் புகார் அளித்து இருப்பது உண்மைதான். அதேபோல டிவி நடிகர் சங்கத்திலும் பேசி இருக்கிறேன். இதுதொடர்பாக சீரியல் வட்டாரத்திலும் பேசியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே நடிகை நிரோஷா தயாரித்த சீரியலில் மனிஷா நடித்து இருந்தார். அப்போது அவருக்கும் மனிஷாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. இப்போது தயாரிப்பாளர் சங்கம் வரை மனிஷா மீது புகார் போயிருக்கிறது. இதனால் இவர் நடிப்பதற்கு தடை விதிக்கப்படுமா? சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவு எடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement