அனைவர் முன்பும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் பாத் ரூமில் கதறி அழும் கவின்.!

0
6972
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒரு வழியாக 25 நாட்களை கடந்து விட்டார்கள். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா சென்ற பிறகு நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யமே இல்லை என்று ரசிகர்கள் எண்ணி வருகிறார்கள் என்பது தான் உண்மை.

-விளம்பரம்-

வனிதா சென்ற பிறகு கவின், சாக்க்ஷி மற்றும் லாஸ்லியா ஆகிய மூவருக்கும் இருக்கும் முக்கோண காதல் கதையை தான் திருப்பி திருப்பி காண்பித்து வருகின்றனர். இதனால் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. இடையில் மீரா கொஞ்சம் கண்டன்ட் கொடுக்க முயற்சித்தாலும் அதுவும் ஈடுபடவில்லை.

இதையும் பாருங்க : தர்ஷனை சீண்டிய மீரா.! கடுப்பாகி தர்ஷன் காதலி பதிவிட்டதை பாருங்க.! 

- Advertisement -

இன்றைய இரண்டு ப்ரோமோவிலும் கூட கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகிய மூவரின் பஞ்சாயத்தை தான் காண்பித்து கொண்டிருந்தனர். அதிலும் ஒவ்வொரு முறையும் கவின், லாஸ்லியா, சாக்க்ஷி ஆகியோரை காண்பிக்கும் போது போடப்படும் சினிமா bgm தான் ரசிகர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

மேலும், இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ்திங்கள் கிழமை (ஜூலை 15) துவங்கியது. அதில் அபிராமி, சேரன், மீரா மிதுன், மோகன் வைத்யா, சரவணன் ஆகியோர் இந்த வார எலிமினிஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரத்திற்கான ஓட்டிங் பிராஸஸ்சும் துவங்கிவிட்டது.

-விளம்பரம்-

Advertisement