நான் தான் காதலை சொன்னேன்,ஆனா இப்போ அவர் – காதல் குறித்து மனம் திறந்த லட்சுமி மேனன்.

0
204
- Advertisement -

தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதன் முதலாக மனம் திறந்து நடிகை லட்சுமி மேனன் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் இளம் புயலாக வந்து பிரபலமான நடிகையாக இருப்பவர் லட்சுமி மேனன். தமிழில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான கும்கி படம் மூலம் அறிமுகமனவர் லட்சுமி மேனன். கும்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-
lakshmimenon

அந்த படத்திற்காக இவருக்கு பல்வேறு விருதுகளும் குவிந்தது. இதனை தொடர்ந்து லட்சுமி மேனன் அவர்கள் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

- Advertisement -

லட்சுமிமேனன் திரைப்பயணம்:

பின் சரியாக தமிழில் பட வாய்ப்புகள் அமையாமல் இருந்ததால் இவர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி தன்னுடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி 2 படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் லட்சுமி மேனன் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் கங்கனா, ராதிகா, வடிவேல் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

லட்சுமிமேனன் பேட்டி:

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் தோல்வியை தழுவியது என்று தான் சொல்லணும். ஆனாலும், லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லட்சுமிமேனன் தன்னுடைய முதல் காதல் குறித்து சொன்னது, இதுவரை என்னிடம் யாரும் காதலை சொல்லவில்லை. நான் தான் என்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறேன். நான் ஸ்கூலில் படிக்கும் போது ஒருவரை எனக்கு பிடித்திருந்தது.

-விளம்பரம்-

முதல் காதல் குறித்து சொன்னது:

அவரிடம் நேரடியாகவே சென்று என்னுடைய காதலை சொன்னேன். ஆனால், அவர் சில நாட்கள் கழித்து தான் என்னுடைய காதலை ஒப்புக்கொண்டார். அதற்குப் பிறகு நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசினோம். தொலைபேசியில் பேசினோம், போர்வைக்குள் இருந்து கொண்டு என் வீட்டிற்கு தெரியாமல் எல்லாம் அவரிடம் பேசினேன். வெளியே அதிகமாக பேசிக் கொள்ள மாட்டோம். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்களுடைய காதல் என்ன ஆனது? என்றே தெரியவில்லை. நாங்கள் இருவரும் எங்களுடைய படிப்பை பற்றி மட்டும்தான் யோசித்தோம்.

விஷால்-லட்சுமி மேனன் காதல்:

அதன் பிறகு இருவரும் பேசவே இல்லை. சமீபத்தில் தான் அவருக்கும் திருமணம் நடந்தது என்று கேள்விப்பட்டேன் என்று கூறியிருந்தார். மேலும், லட்சுமிமேனன், நடிகர் விஷாலை சில ஆண்டுகளாகவே காதலிக்கிறார் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் பரவியிருந்தது. இதற்கு இருவருமே எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருந்தார்கள். இது குறித்து விஷால், ஒரு பெண்ணின் திருமணம் குறித்து பொய்யான தவறான வதந்திகளை பரப்பி அவருடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்.

Advertisement