அவரு சிவகார்த்திகேயன் போல் வந்திருக்க வேண்டியவர் – பிரபல நடிகர் குறித்து லிங்குசாமி ஆதங்கம்.

0
434
lingu
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த கில்லி, கீரிடம், குருவி போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகி அதன் பின்னர் “பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விமல். இவர் நடித்த பசங்க திரைப்படம் பெரியளவில் ஹிட் அடிக்கவே தொடர்ந்து களவாணி, கலகலப்பு, மெரீனா, வாகை சூடவா போன்ற திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்து. இப்படி இவர் நடத்த திரைப்படங்கள் பல வெற்றியை கொடுக்க “கேடி பில்லா கில்லாடி ரங்கா” என்ற திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த விமல் தன்னுடைய நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் விமல் தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் பெரியளவில் ஹிட் அடிக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து மஞ்சப்பை, மாப்பிள சிங்கம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் விமல் சமீபத்தில் நடித்த வெப் சீரிஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது “துடிக்கும் கரங்கள்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குனர் வேலுதாஸ் இயக்கி இருந்தார்

- Advertisement -

ஓடியன் டாக்கீஸ் கே. அண்ணாதுரை, காளிதாஸ், வேலுதாஸ் போன்றவர்கள் தயாரித்துள்ளனர். இப்படத்தில் மிஷா நரங், சதீஸ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்பாடத்தில் முதல் டீசர் வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் துடிக்கும் கரங்கள் படக்குழு மற்றும் இயக்குனர் லுங்குசாமி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் லிங்குசாமி பேசுகையில் துடிக்கும் கரங்கள் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் பெயரை வைத்துள்ளார். ஏனென்றால் அவர் நடிக்கும் திரைப்படங்களில் சுமாராக ஒடிய படங்களின் பெயரை வைத்தால் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்ற நோக்கில் வைத்துள்ளார் என்றார். மேலும் படத்தின் டீசரை பார்த்தேன் படம் கண்டிப்பாக நல்ல வெற்றியை படக்குழுவிற்கு இந்த படம் கொடுக்கும் என்று கூறினார் இயக்குனர் லிங்குசாமி.

-விளம்பரம்-

மேலும் வாரிசு திரைப்படத்தின் சர்ச்சை பற்றி பேசிய இயக்குனர் லிங்குசாமி `தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் பண்டிகை காலங்களில் தமிழ் திரைப்படங்கள் ஆந்திராவில் வெளியாகக் கூடாது என்று எடுத்துள்ள முடிவு முற்றிலும் தவறானது. ஏனென்றால் சினிமாவில் தற்போது எல்லாப் படங்களும் வெற்றி பெறுகின்றனர். இந்த சூழ்நிலையில் வாரிசு படைத்தின் சர்ச்சையினால் சினிமாவுலகில் வாரிசுக்கு முன், வாரிசுக்கு பின் என்று ஆகி விடும்.

இது நடக்காமல் இருக்க தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்து பேசி இந்த விஷயத்திற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறினார். நடிகர் விமல் தற்போது “துடிக்கும் கரங்கள்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை தொடர்ந்து வரும் 2022 மற்றும் 2024 ஆண்டுகளில் தெய்வ மச்சான், குலசாமி, வெற்றி கொண்டான், எங்கள் பாட்டன் சொத்து, சண்டைக்காரி, சோழ நட்டான் போன்ற 5திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் விமல் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement