விஜயில் மெர்சல் படம் தீபாபளிக்கு ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம். இந்த படத்தின் வெற்றியை சமீபத்தில் அவரது வீட்டில் படக்குழுவினருக்கு விருந்து வைத்துக் கொண்டாடினார் விஜய்.
இந்நிலையில் விஜய் மற்றும் மெர்சல் பட இயக்குனர் அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகிய மூவரும் துபாய் சென்றுள்ளனர். மெர்சல் படத்தின் வெற்றியைக் கொண்டாவவே துபாய் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், துபாயின் கடற்கரையோரம் விஜய் நின்றுள்ளதை பார்த்து ஆரவாரம் செய்துள்ளனர் மக்கள்.
படத்தின் வெற்றி விழா ஏற்கனவே கொண்டாடப்பட்டுள்ள நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருடன் விஜய் சென்றிருப்பதால், அடுத்த படத்திற்க்கான வேலையாகக் கூட இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும், மெர்சல் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனதால், இந்த டிஸ்கசன் மெர்சல்-2வாக கூட இருக்கலாம் எனவும் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இதையும் படிங்க: தளபதி விஜய்யின் பரிதாபமான நிலையில் புரட்டிப்போட்ட அந்த நாள் எது தெரியுமா !
ஆனால், எப்படியும் இந்தக் கூட்டணி அமைந்தால் உடனடியாக அடுத்த படமாக இருக்க வாய்ப்பில்லை. தற்போது தனது 62ஆவது படத்திற்காக ஃபேவரட் இயக்குனர் முருகதாசுடன் கைகோர்த்துள்ளார்.இதனால் மெர்சல்-2 உருவாக ரசிகர்கள் காத்திருக்க வேண்டும். இருந்தாலும் நீங்க வந்தா மட்டும் போதும் என காத்திருக்கின்றனர் விஜய் ரசிகர்கள்.