Mr And Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் தெரியுமா ? பல லட்சத்தை தட்டி சென்ற ஜோடி.

0
609
- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான ஜோடி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி சேனல்கள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

இதனால் விஜய் டிவி வித்தியாசமான பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட நிகழ்ச்சி தான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் கணவன் மனைவியாக நிகழ்ச்சியில் பங்கேற்று விளையாடுவது. ஆரம்பத்தில் 12 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி இருந்தார்கள். பின் பல போட்டிகள், சவால்கள் உடன் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக செல்லும்.

- Advertisement -

Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி:

வழக்கம் போல் இந்த நிகழ்ச்சியை மாகாபா மற்றும் நிஷா தொகுத்து வழங்கி வருகிறார்கள். நடுவராக நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இருக்கிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து இருக்கிறது. கடந்த மூன்றாவது சீசனில் சரத் – கிருத்திகா ஜோடி டைட்டில் வின்னர் ஆனார்கள். இந்த டைட்டில் வின்னர் ஜோடிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. யாருமே எதிர்பார்க்காத சரத்- கிருத்திகா ஜோடி தான் டைட்டில் வின்னர் ஆனது பல பேருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது.

Mr. And Mrs. சின்னத்திரை சீசன் 4:

தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா – ஜெஸ்ஸி, மகாலிங்கம் – ராஜேஸ்வரி, சிங்கப்பூர் தீபன் – சுகன்யா, ரஹ்மான் – ஃபரிணா, மதன் – ரேஷ்மா, யோகி – சத்யா, பிரவீன் – ஐஸ்வர்யா, ராம் – ஜானு, ஸ்ரீகுமார் – அணிலா, வசந்தகுமார் – ரேகா என மொத்தம் 10 ஜோடிகள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இந்த முறை பல வித்தியாசமான போட்டிகளுடன் நடைபெற்று இருந்தது. அனைவரும் எதிர்பார்த்து இருந்த பைனல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடுமையான போட்டிகள் கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் இந்த சீசனில் வெற்றி பெற்றிருக்கும் நபர் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் மகாலிங்கம் – ராஜேஸ்வரி. இவர்கள் மூன்று லட்சம் ரூபாய் தொகையை வெற்றி பெற்று இருக்கின்றனர். மகாலிங்கம் தமிழ் சினிமா உலகில் பின்னணி பாடகராக திகழ்பவர்.

டைட்டில் வின்னர்:

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்ற சோழா சோழா என்ற பாடலையும் இவர்தான் பாடி இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து மகாலிங்கம் – ராஜேஸ்வரி ஜோடி சிறப்பாக விளையாடி வந்தார்கள். பலரும் இவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் வின்னர் ஆகிருக்கின்றனர். இவர்களை அடுத்து மதன்- ரேஷ்மா ஜோடி இரண்டாவது இடத்தையும், பரீனா- ரகுமான் மற்றும் வசந்த் – ரேகா ஜோடிகள் மூன்றாவது இடத்தையும் பிடித்திருக்கின்றனர்.

Advertisement