விவாகரத்து குறித்து முதன் முதலாக நாக சைதன்யா கூறியிருக்கும் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா இருவரும் கடந்த 2019 தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம் நண்பர்களாக பழகத் தொடங்கினார்கள். பின் சமந்தா- நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன் பின் இவர்கள் காதல் விவகாரம் வெளியே வர துவங்கியது.
பின் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து மிக பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. இருவரும் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிய இருப்பதாக கடந்த ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.
இதையும் பாருங்க : தனுஷ் படத்தில் நடித்ததால் இத்தனை ஆண்டு வாய்ப்பில்லாமல் இருந்துள்ள திரிஷா – அவரே சொல்லி புலம்பிய காரணம்.
சமந்தா- நாக சைதன்யா பிரிவு:
இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்களின் பிரிவு குறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளும், வதந்திகளும் எழுந்த வண்ணம் இருந்தது. ஆனால், இருவரும் விவாகரத்து குறித்த காரணத்தை தெரிவிக்கவே இல்லை. அதன் பின் இவர்கள் இருவரும் தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமந்தா- நாக சைதன்யா நடிக்கும் படங்கள்:
இவர் திரில்லர் கதை களம் கொண்ட படம், ஹாலி வுட் படம், சாகுந்தலம், யசோதா போன்று பல படங்களில் சமந்தா மிரட்டிக் கொண்டு வருகிறார். அதேபோல் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யா அவர்களின் இரண்டாவது திருமணம் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது அவருக்கு தீவிரமாக பெண் பார்த்து வருகிறார்களாம். மேலும், விவாகரத்துக்குப் பின்னர் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் அவர்களுடைய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாக சைத்தன்யா அளித்த பேட்டி:
தற்போது நாக சைத்தன்யா தேங்க் யூ படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை அவர் விவாகரத்து குறித்து பெரிதாக பேசாமல் இருந்த நிலையில் தற்போது சமந்தா உடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, விவாகரத்துக்கு பின்னான காலகட்டத்தில் நான் ஒரு மனிதனாக நிறைய மாறியிருக்கிறேன். ஆரம்பத்தில் என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், இப்போது நான் தயாராக இருக்கிறேன்.
சமந்தா அளித்த பேட்டி:
இப்போதெல்லாம் என் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உணர்வுபூர்வமாக நெருக்கமாக இருக்கிறேன். புது மனிதனாக என்னை நான் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். இதேபோல் சமீபத்தில் நடைபெற்ற காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற சமந்தா அவர்கள் நாக சைதன்யாவுடன் விவாகரத்து பற்றி கூறியிருந்தார். அதில், ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ஆனால், நான் நன்றாக இருக்கிறேன். இப்போது நான் மிகவும் வலிமையாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.