சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 10) வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் இருந்தது. எதிர்பார்த்த இந்த இரண்டு படங்கலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இதில் அஜித்தின் விஸ்வாசம் படம் முதல் நாளில் பேட்ட படத்தை விட அதிக வசூலை செய்து சாதனை படைத்தது. அதே போல சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் உலகம் முழுவதும் பல்வேறு வசூல் சாதனைகளை புரிந்து வருகிறது .
இதையும் படியுங்க : 27 வருடம் கழித்து ரஜினிக்கு பின்னடைவு.! கெத்து காட்டும் விஸ்வாசம்.!
பொதுவாக ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கும் என்பது தெரியும். அதிலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் சொல்லவே வேண்டியது இல்லை.
இந்நிலையில் சென்னயில் உள்ள திரையரங்கனா ரோஹனி திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதில் கடந்த 30 வருடத்தில் பாகுபலி-2விற்கு பிறகு அதிக கூட்டத்தை பேட்ட, விஸ்வாசத்திற்கு தான் பார்க்கின்றோம்’ என்று டுவிட் செய்துள்ளார்.