முதல் நாளே பொன்னியின் செல்வன் வசூல் எவ்வளவு தெரியுமா? லைகா வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு.

0
403
ponniyin
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் எப்போதும் வித்யாசமான படங்களை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரகுமான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : வேடிக்கைய பாருங்க, அண்ணா, கலைஞர் என்று எல்லா பெரியார் தாக்கம் உள்ள பகுத்தறிவார்கள்கள் எல்லாம் சேர்ந்து சிவாஜிக்கு அங்க கல்யாணம் பண்ணி வச்சாங்க – சிவகுமார் சொன்ன சுவாரசியம்.

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தின் மாமன்னன் சுந்தர சோழர் உடல் நல குறைவால் நோய்வாய்ப்பட்டு தஞ்சையில் இருக்கிறார். இவருடைய பிள்ளைகள் ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், குந்தவை ஆவார்கள்.

-விளம்பரம்-

படத்தின் கதை:

இவருடைய மகன்களான ஆதித்ய கரிகாலனும், அருள் மொழி வர்மனும் ஒவ்வொரு திசையில் போர் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் வானில் தோன்றும் வால் நட்சத்திரம் மறையும் போது சோழ இரத்தம் ஒன்றை பலிக் கொல்லும் என்பது தான் நியதி. இப்போது தான் கதை தொடங்குகிறது. சோழ சிம்மாசனத்தின் மீது பலரும் ஆசை கொள்கிறார்கள். இன்னொரு பக்கம், பழுவேட்டரையரின் மனைவி நந்தினி அவர்கள் முன்னாள் காதலனும், வீரபாண்டியனின் தலையைக் கொன்ற ஆதித்ய கரிகாலனை கொல்ல பாண்டியர்களுடன் சேர்ந்து சதி செய்கிறாள். பின் சோழ சாம்ராஜ்யத்தை வஞ்சமும், துரோகமும் சூழ்ந்து இருக்கிறது.

படத்தின் விமர்சனம்:

இந்த நிலையில் ஆதித்யகரிகாலனையும், அருள்மொழியையும் தஞ்சைக்கு வரவழைத்து சோழ நாடு உள்நாட்டு போர்களால் அழியாமல் தடுக்க அவருடைய தங்கையும், இளவரசியமான குந்தவை திட்டம் போடுகிறார். அப்போதுதான் படத்தின் நாயகன் வந்திய தேவன் செய்தி கொண்டு வருகிறார். வந்தியதேவன் செய்தி கொண்டு வரும் பயணம் வழியாக தான் படமே நகர்ந்து செல்கிறது. வந்திய தேவன் கொண்டு வந்த செய்தி என்ன? உள்நாட்டு சதிகளை ஆதித்ய செய்தி அருள்மொழி வர்மனும், குந்தவையும் எதிர்கொண்டார்களா? என்பது தான் படத்தின் சுவாரசியமே.

படத்தின் முதல் நாள் வசூல்:

படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் மாஸ் காட்டி இருக்கிறார்கள். மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, பொன்னியின் செல்வன் படம் வெளியாகி உலகம் முழுவதும் முதல் நாளில் 80 கோடி வரை வசூலித்து இருக்கிறது. இதை இந்த படத்தை தயாரித்த லைக்கா ப்ரொடக்ஷனில் தன்னுடைய சமூக வலைதலை பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Advertisement