அந்த படத்திற்க்கு முன்னர் இயக்குனர் பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் கஞ்சா விற்றுக் கொண்டு ஒரு கதா பாத்திரத்தில் நடித்ததால் தான் இவருக்கு கஞ்சா கருப்பு என்ற பெயரும் வந்தது.மேலும் ராம் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு நண்பராக நடுத்திருந்தார். மேலும் அந்த படத்தில் வாழவந்தான் என்ற கதாபாத்திரித்தில் நடித்திருந்த கஞ்சா கருப்புவிற்கு அந்த படத்திற்க்கு பிறகே பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் ராம் படத்தில் கஞ்சா கருப்பின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது காமெடி நடிகர் கருணாஸ் தானம்.இயக்குணர் பாலா எடுத்த நந்தா படத்தில் காமெடியகினாக அறிமுகமான கருணாஸ் அந்த படத்திற்கு பிறகு பல தமிழ் படங்களில் நடித்து வந்தார். எனவே ராம் படத்தை இயக்கிய அமிருக்கும் அந்த படத்தில் கருணாஸை காமெடியனாக நடிக்க வைக்க முடிவெடுத்தாராம். இதனால் கருணாஸை வைத்து ஒத்திகை படப்பிடிப்பையும் கூட முடித்துவிட்டார்களாம். ஆனால் சில பல காரணங்களால் திடீறென்று கருணாஸ் அந்த படத்தில் இருந்து வெளியேறியுள்ளார். அதன் பின்னரே கஞ்சா கருப்பூவை அந்த படத்தில் நடிக்கவைத்துள்ளார் இயக்குனர் அமீர்.சினிமாReading time · 1 min





