சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வாணி ராணி ' தொடரில் நடித்துவரும் இவர், ஒரு சில பிரபலமான தொடர்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் தனது பெற்றோர் முன்னாள் மக்கள் தன்னை கேவலமாக திட்டிய ஒரு அனுபவத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"ஒரு நாள் என் தம்பியை பஸ் ஏற்றிவிட வெளியே சென்றேன். அப்போது எனது அம்மா, அப்பா இருவரும் உடன் இருந்தனர். அப்போது என்னை பார்த்த மக்கள் சிலர் நான் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை மனதில் வைத்துக் கொண்டு நான் நிஜ வாழ்விலும் வில்லனாகத்தான் இருப்பேன் என்று எண்ணி, என் பெற்றோர்கள் முன்னிலையில் என்னை கேவலமான வார்த்தைகளில் திட்டி தீர்த்தனர்.
அவர்கள் திட்டிய வார்த்தைகளை என்னால் வெளியில் கூட சொல்ல முடியவில்லை. அவர்கள் திட்டியதர்காக நான் அவர்கள் மீது கோபமும் கொள்ளவில்லை. ஏனெனில் எனது கதாபாத்திரம் இந்த அளவிற்கு பிரபலமடைந்து விட்டதை எண்ணி நான் ஒரு பக்கத்தில் சந்தோச பட்டுக்கொண்டேன் " என்று தெரிவித்துள்ளார்.




