மாமாவை தொடர்ந்து பெரியப்பவாக ப்ரமோஷன் ஆன சிம்பு – 4 ஆண்டுகள் கழித்து தம்பிக்கு பிறந்த வாரிசு.

0
431
- Advertisement -

நடிகர் சிம்புவின் தம்பிக்கு குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக இருந்தவர் டி ராஜேந்தர். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகர், தயாரிப்பாளர், வசனம் எழுதுபவர் என பன்முகங்களைக் கொண்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவர் இயக்குவதை நிறுத்தி படங்களில் நடித்து கொண்டு இருந்தார். பின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இவர் சினிமாவில் இருந்து விலகி ஓய்வு எடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், இயக்குநர் டி.ராஜேந்தருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

குறளரசன் குறித்த தகவல்:

பின் இடையில் இவரின் சில படங்கள் தோல்வி அடைந்தது. மீண்டும் இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஆனால், இவரின் தனிப்பட்ட வாழ்க்கை தான் சரியாக அமையவில்லை. மேலும், சிம்புவின் தம்பியும், ராஜேந்தரின் இளையமகன் குறளரசன். இவரும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவரால் சிம்புவை போல திரையுலகில் நிலைத்து நிற்க முடியவில்லை. பின் இவர் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

குறளரசன் திருமணம்:

காரணம், இவர் நபீலா அஹமத் என்பவரை காதலித்து வந்தார். நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இவர்களுடைய திருமணம் 2019 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சிம்புவின் தம்பிக்கு பிறந்த குழந்தை:

இந்த நிலையில் குறளரசன் மனைவி நபீலா அவர்கள் கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருக்கிறார்கள். இதை அடுத்து பலருமே குரலரசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிம்புவின் தங்கையான இலக்கியாவிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் மகன் பிறந்தார்.

ரசிகர்கள் வாழ்த்து:

இதனால் மாமாவானார சிம்பு. அடிக்கடி தன் மருமகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கூட இணையத்தில் வெளியிட்டிருந்தார் சிம்பு. தற்போது தன்னுடைய தம்பி குழந்தை பிறந்ததன் மூலம் சிம்பு பெரியப்பாகி இருக்கிறார். இது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் சிம்புவுக்கு திருமணம் ஆகவில்லை என்பது வருத்தத்தை கொடுத்திருக்கிறது.

Advertisement