தாலி பிரித்து கோர்க்கும் பங்சனில் ரோகினி, ஸ்ருதி அம்மா போடும் திட்டம்- இவர்களின் வலையில் முத்து சிக்குவாரா? சிறகடிக்க ஆசை

0
195
- Advertisement -

பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்கும் ஆசை சீரியலின் புதிய ப்ரமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் கதை. முத்து வீட்டில் அவருடைய தாய் எப்போதும் முதல் மற்றும் இளைய மகனுக்கு தான் சப்போர்ட் செய்கிறார்.

-விளம்பரம்-

முத்து தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான் என்பதால் சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது கோபம் இருக்கிறது. உண்மையில் முத்து தன்னுடைய தாயின் பாசத்திற்காக ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி மீனா பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஒரு வழியாக ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. கடந்த வாரம் சீரியலில் முத்துவிற்கு பெரிய மாலை ஆர்டர் கிடைக்கிறது. அதை முத்து- மீனா இருவரும் பல போராட்டங்களுங்கு பின் செய்து முடிக்கிறார்கள். மாலை ஆர்டர் மூலம் கிடைத்த பணத்தில் முத்துவிற்கு தெரியாமல் சர்ப்ரைஸ் ஆக மீனா கார் வாங்கிக் கொடுக்கிறார்.

-விளம்பரம்-

சீரியல் கதை:

வழக்கம்போல் இதை விஜயா, மனோஜ் கிண்டல் செய்கிறார்கள். ஆனால், ரோகினிக்கு பயம் ஏற்படுகிறது. பின் மனோஜ்க்கும் ஒரு தொழில் வைத்து தர சொல்லி ரோகினியிடம் பேசுகிறார் விஜயா. ஆனால், ரோகிணி மறுக்கிறார். அதோடு ரோகிணி தந்தையை பார்க்க வேண்டும் என்று விஜயா அடம் பிடிக்கிறார். இதனால் தன்னை பற்றிய உண்மை தெரிந்து விடுமோ என்ற பயத்தில் ரோகிணி இருக்கிறார். இன்னொரு பக்கம் சுருதி- ரவியை தன் வீட்டிற்க்கே கொண்டு வர வேண்டும் என்று சுருதியின் அம்மா-அப்பா திட்டம் போடுகிறார்கள்.

தாலி பிரித்து கோர்க்கும் பங்சன்:

இதனால் ஸ்ருதி -ரோகினிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடைபெற இருக்கிறது. இன்றைய எபிசோடில் எல்லோருமே மண்டபத்திற்கு வந்து விடுகிறார்கள். விஜயா, உன்னுடைய அப்பா வரவில்லையா? என்று ரோகிணி இடம் கேட்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் ரோகினி பயத்தில் அமைதியாக இருக்கிறார். இன்னொரு பக்கம் முத்து சண்டைக்கு போகக்கூடாது என்று மீனா பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

சீரியல் ப்ரோமோ:

இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில், ரோகினி எப்படியாவது முத்துவை குடிக்க வைத்து பங்ஷனை நிறுத்த திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அம்மா ஆட்களை ரெடி பண்ணி முத்து விடம் சண்டை வாங்க ஏற்பாடு செய்கிறார். மீனா, முத்துவை பிரச்சனையில் காப்பாற்ற போராடுகிறார். இனிவரும் நாட்களில் ரோகினி- ஸ்ருதி அம்மாவின் திட்டம் நிறைவேறியதா? முத்து இவர்களின் திட்டத்தை முறியடிப்பாரா? போன்ற அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement