சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மிக்கு அறிமுகம் தேவையில்லை. விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. மேலும், இந்த சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கணவன், மனைவி இருவரும் கலந்து கொண்டார்கள். பின் இந்த சூப்பர் சிங்கர் மேடையில் பல நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும்,போட்டியில் இறுதி வரை செந்தில் கணேஷ் தன்னுடைய விடாமுயற்சியால் பைனலுக்கு சென்றார்.
மேலும், இந்த சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றியும் பெற்று வீட்டை தட்டிச் சென்றார். மேலும்,இந்த விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தான் இவர்கள் வாழ்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். மேலும், தற்போது இந்த ஜோடிகள் திரை உலகில் பல பாடல்களை பாடி வருகிறார்கள். அதிலும் நடிகர் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படத்தில் பாடிய “என்ன மச்சான், சொல்லு புள்ள” பாடல் வேற லெவல் தெறிக்கவிட்டது என்று சொல்லலாம்.
இதையும் பாருங்க : 500 படங்களுக்கு மேல் நடித்தும் அரசு மருத்துவமனையில் குள்ளமணி எப்படி இறந்தார் தெரியுமா ?
அதுமட்டும் இல்லாமல் சின்ன சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாட்டை அதிகம் விரும்பி கேட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவர்கள் பிரபலமானார்கள். மேலும், இந்த பாட்டினை சார்லி சாப்லின் படத்திலும் பாடி அதுவும் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், இவர்கள் இருவருக்கும் அடுத்தடுத்து கச்சேரிகளும் குவியத் துவங்கியது. அவ்வளவு ஏன் வெளிநாட்டில் கூட கச்சேரிகளை செய்து வந்தனர்.
இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தான் புதிய அடுக்கு மாடி வீடு ஒன்றை வாங்கி இருந்தனர் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்பதி. மேலும், கிரக பிரவேசம் செய்தும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுஇருந்தார் . அதோடு என் தாய்,தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டேன் என்று உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு இருந்தார்.
அதே போல கடந்த சில மதங்களுக்கு முன்னர் தான் தனது தங்கைக்கு திருமணத்தை முடித்தார் செந்தில் கணேஷ். இப்படி ஒரு நிலையில் புதிய ஸ்டூடியோ ஒன்றை ஆரம்பித்து உள்ளார்கள். லாக் டவுன் காலத்தில் கூட இப்படி அடுத்தடுத்து செந்தில் கணேஷ் வளர்ந்து வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.