கேப்டனின் உடல் நிலை குறித்து பிரேமலதா சொன்ன அதிர்ச்சி தகவல் – கவலையில் ஆழ்ந்த ரசிகர்கள்.

0
649
Vijayakanth
- Advertisement -

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா அளித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் ஒரு காலத்தில் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல் காலத்தில் அவர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-
vijayakanth

இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவருடைய பல படங்கள் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்து இருக்கிறது. இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளியான விருதகிரி என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தை அவரே இயக்கி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம்.

- Advertisement -

இதையும் பாருங்க : கோபி கல்யாணம் ஆகும் போது 23, ஆனா பாக்கியாவோட வயசு – சர்ச்சை கேள்விக்கு பாக்கியலட்சுமி சதீஷ் சொன்ன பதில்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். பிறகு விஜய்காந்த் முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். அது மட்டுமில்லாமல் சமீப காலமாக அவருக்கு உடல் பிரச்சனைகள் அதிகமாக இருந்ததால் அவரால் படங்களில் நடிக்க முடியாமல் போனது. இதனால் இவர் அடிக்கடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு சில காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக விஜயகாந்த், சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பெரிதாக தலையிடாமல் தான் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

தீவிர சிகிச்சை பெறும் விஜயகாந்த்:

தற்போது தே மு க கட்சியை கூட அவரது குடும்பத்தினர் தான் கவனித்து வருகின்றனர். மேலும், தொடர்ந்து டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். பேசும் திறனும் குறைந்து உள்ளது. இந்த குறைபாடுகளை போக்குவதற்காக விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

விஜயகாந்தின் உடல்நிலை :

மேலும், கடந்த ஜுன் 14ம் தேதி விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது. விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றி இருக்கிறார்கள். விஜயகாந்த் விரைவில் நலமுடன் திரும்பி வர வேண்டும் என்று ரசிகர்களும் பிரபலங்களுக்கும் அவருக்காக வேண்டி வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா சொன்னது:

இந்த நிலையில் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பிரேமலதா கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு ஆதரவு நிகழ்ச்சியில் பிரேமலதா பங்கேற்று இருந்தார். அப்போது அவரிடம் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினார்கள்? அதற்கு பிரேமலதா கூறியிருந்தது, விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று டாக்டரிடம் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும் விரைவில் அவர் பழைய நிலைக்குத் திரும்புவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரது உடல்நிலையை பெரிதுபடுத்த வேண்டாம். எங்கள் நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement