தன் தந்தையின் 100வது பிறந்தநாளில் கைக்கூப்பி உருகி வணங்கிய விஜயகாந்த் – வைரலாகும் புகைப்படம்

0
672
Vijayakanth
- Advertisement -

குடும்பத்துடன் தன் தந்தையின் நூறாவது பிறந்த நாளை நடிகர் விஜயகாந்த் கொண்டாடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. மேலும், சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது படத்தில் பிச்சை காரனாக நடித்த ஒரே நடிகரும், வேறு மொழிகளில் வாய்ப்பு கிடைத்த போதிலும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகரும் இவர்தான் என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

விஜயகாந்த் திரைப்பயணம்:

கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். இது தான் ரசிகர்கள் அவரை திரையில் பார்த்த கடைசி படம். அதற்குப்பின் அவர் சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் களமிறங்கி இருந்தார். இவர் நடிப்பை தாண்டி மக்களுக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் என்பதையும் தாண்டி நல்ல உள்ளம் கொண்டவர் என்றே சொல்லலாம். இவரை தேடி யார் வந்தாலும் சாப்பாடு போட்டு அன்போடு அனுசரிப்பார். தன்னால் முடிந்த உதவிகளையும் அவர்களுக்கு செய்வார்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

இவர் செய்த பல உதவிகள் வெளியே தெரியாமலே போயிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்கமே கடனில் மூழ்கியிருந்தபோது கலை நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து பல உதவிகளை செய்திருக்கிறார். இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக சில ஆண்டுகளாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கட்சியை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் தான் பார்த்து கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜயகாந்த் தந்தையின் பிறந்தநாள்:

மேலும், கட்சியின் வளர்ச்சிக்கு நேரடியாக மக்களை சந்தித்து செயல்படவில்லை என்றாலும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் விஜயகாந்தின் தந்தையின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜயகாந்தின் தந்தை அழகர்சாமி. சமீபத்தில் தான் அழகர்சாமியின் 100வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு இருந்தது. அதில் விஜயகாந்தின் மொத்த குடும்பமும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

அப்போது எடுத்த புகைப்படத்தை தான் தற்போது விஜய் பிரபாகரன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் விஜயகாந்த், பிரேமலதா, விஜயகாந்த் மகன்கள் ஆகியோர் அழகர்சாமியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் தன்னுடைய தந்தை அழகர்சாமி, தாய் ஆண்டாள் ஆகியோரின் நினைவாக ஆண்டாள் அழகர் என்ற பொறியியல் கல்லூரியும் விஜயகாந்த் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement