மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் நடிகர் கதிர். அதன்பின்னர் விக்ரம் வேதா, என்னோடு விளையாடு போன்ற படங்களில் நடித்தார். விக்ரம் வேதா படத்தில் வரலட்சுமிக்கு ஜோடியாக நடித்தார்.
இவருடைய சொந்த ஊர் ஈரோடு ஆகும். இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த தொழிலபதிர் ஒருவரின் மகள் சஞ்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சியம் செய்யப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் இந்த திருமணம் நடைபெற உள்ளது.
ஈரோட்டில் நடைபெற உள்ள இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கின்றனர். சஞ்சனா பிஸ்னஸ் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த பின்னர் இருவருக்கும் சென்னையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். கதிர் தற்போது சத்ரு மற்றும் பரியேறும் பெருமாள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.