சினிமாக்காரங்கனாலே பணக்காரங்க இல்ல, மாச கடைசில சில்லரைய தேடி எடுத்து சாப்பிட்டு இருக்கேன் – திருடு போன பணம் குறித்து வினோதினி.

0
629
Vinodhini
- Advertisement -

தமிழில் வெளியான எங்கேயும் எப்போதும், கடல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, ஜிகர்தண்டா, வன்மம், நண்பேண்டா, அரண்மனை 2, ஆண்டவன் கட்டளை போன்ற பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர் வினோதினி. சமீபத்தில் இவர் தன்னிடம் இருந்து இரண்டு பேர் பணத்தை திருடிவிட்டதாக புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில் ‘ ‘சென்ற வாரம் என்னிடமிருந்து 2 நபர்கள் மொத்தம் 25000 ரூ திருடிவிட்டனர். (தனித்தனியே நடந்த இரு சம்பவங்கள்). இருவர் மீதும் போலீஸ் கம்ப்ளையிண்ட் தரப்பட்டு இந்த வாரத்திற்குள் பணத்தைத் திரும்பத் தருவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை.

-விளம்பரம்-

அவர்கள் இருவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் இல்லையென்றாலும், ஒரு வகையான அன்னாடங்காச்சிகள் தான். ஒருவர் வீட்டு painter. மற்றொருவர் mechanic. தேவைக்காக பணம் திருடிவிட்டனர். CCTV footage இருந்ததால் ஒருவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நம்பருக்கு அழைத்து கழுவி ஊத்தியதாலும் அந்த மனைவியுடன் இவர் இப்பொழுது வாழாததாலும் மற்றொருவர் ஒப்புக்கொண்டார்.

- Advertisement -

இருவரும் நன்றாக வேலை செய்யக்கூடியவர்கள். In fact, அந்த மெக்கானிக்கை எங்களுக்கு பல வருடங்களாகத்தெரியும். அந்த painter தனியாக project வாங்கியும், Urban Company என்ற corporateஇலும் contract வேலைப் பார்க்கிறவர். சாதாரணமாக, இப்படிப்பட்டவர்கள் உழைத்து சாப்பிடவே நினைப்பார்கள். Lower to middle classஇல் இருக்கும் இதுபோன்றவர்கள் தங்களது குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் பல aspirationsஓடு வாழ்வர். தனது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பார்கள்.

பின் இவர்களை (அதாவது களவுக்குப் பரிச்சயமில்லாதவர்களை) எது திருடத்தூண்டுகிறது? இன்றைய காலகட்டமும், நாம் வாழும் சமூகச்சூழலும்தானே. Demonetisation, GST, state taxes, inflation, petrol hike, electricity hike, low quality of goods, increasing divide between rich and poor, high interest rates என்று பொது மக்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஏழைக்குடும்பத்திற்கு கூட சென்னை போன்ற metroவில் மாதம் 20-25000 ரூ தேவைப்படுகிறது. இதில் அதிக நேர வேலை, traffic, அதனால் ஏற்படும் உடல் மற்றும் மனக்கோளாறுகள், சம்பளங்கள் சரியான நேரத்திற்கு வராத பிரச்சனைகள்.

-விளம்பரம்-

corporateகளுடைய vendorகளாக வேலை செய்யும் delivery boys/ executivesஉடைய உழைப்பைச்சுரண்டி commission போக அவர்களுக்கு பிச்சைப்போடுவதுபோல் சம்பளம் தரும் போக்கு என இன்னும் காரணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இனிவரும் காலங்களில் மனிதனை மனிதன் வயிற்றுப்பசிக்காக அடித்துக்கொல்லும் வாய்ப்பும் உள்ளது. அப்படி நடந்தால் அதில் ஒரே நல்ல விஷயம் – அப்பொழுதாவது, சாதி மதம் ஒழிந்து அடுத்த வேளை சாப்பாடு/தண்ணி/காற்று உள்ளவன் – இல்லாதவன் என்ற இரண்டே பிரிவுகளாக நிற்போம்.’என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய பணம் திரும்பக் கிடைத்துவிட்டதாக பதிவு ஒன்றை போட்டுள்ள வினோதினி ‘என்னிடமிருந்து ரூ 20000 களவாடிய பெயிண்டரிடமிருந்து அந்த பணத்தை காவல்துரை நேற்று பெற்றுத்தந்தது. பணம் பறிபோன அன்றிலிருந்து எனக்கு இருந்த மன உளைச்சல் முக்கியமாக எதற்கென்றால் – நாம் ஒருவர் கண்ணிற்கு, அதுவும் இதே அபார்ட்மெண்டில் மேல் வீட்டிற்கு வேலை செய்து கொடுத்தவர் கண்ணிற்கு, ஒரு easy target ஆக தென்பட்டிருக்கிறோமென்று தான். எல்லொரும் நினைப்பது, சினிமாவில் இருப்பவர்கள் பல லட்சம் பல கோடி சொத்து வைத்திருப்பார்கள்.

இது பல நேரத்தில் உண்மையாகவும் இருக்கலாம், ஏனெனில் அதிக பணம் புழங்கும் இடங்களில் சினிமாவும் ஒன்று. ஆனால், எல்லோரிடமும் அப்படி இருப்பதில்லை. அதுமட்டுமில்லாது, இங்கு நிரந்தர சம்பளம் என்று கிடையாது. அதனால், சேமிப்பு மற்றும் careful spending மிக அவசியமாகிறது. நமக்கு முன்னிருந்த சினிமா நடிக நடிகையர்கள் பணம் விஷயத்தில் செய்த தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வது உசிதம். எனது தாயும் தந்தையும் பத்து ரூபாய் சம்பாதிப்பதற்கு எப்படியெல்லாம் சிரமப்பட்டனர் என்பதைக் கண்கூடாக பார்த்தவள் நான்.

கல்லூரியில் ஆண்டு விடுமுறையிலும் லீவு இல்லாமல் extra coaching/tuition/translations/corrections என என் தாய் ஓடியதும், மழையில் உடைந்த குடையோடு என் தந்தை வேலைக்கு சென்றதெல்லாம் மறக்க முடியாது. நான் பெங்களூருவில் படித்த காலத்தில் மாதக்கடைசியில் நானும் என் ரூமில் தங்கியிருந்த இரு பெண்களும் சில்லரையை எண்ணி எடுத்துக்கொண்டு சாப்பிட செல்வோம். 20000 இவளுக்கெல்லாம் பெரிய தொகையில்லை, இதற்கெல்லாம் போலீஸ் வரைக்கும் போக மாட்டார்கள் என்று அந்தத் திருடன் ஊகித்திருப்பான். எனக்கு என் பணத்தை மிக மிக எளிமையாக smoothஆக பேசி வாங்கிக்கொடுத்த E4 அபிராமபுரம் போலீஸ் ஸ்டேஷன் Head Constable திரு அன்பழகன் ஐயா அவர்களுக்கும் உதவியாக இருந்த திரு பாலமுருகன் அவர்களுக்கும் திரு P Suresh அவர்களுக்கும் சிரம்தாழ்ந்த நன்றிகள். மேலும் ரூ 5000 களவாடிய மற்றொரு நபர் இந்த வாரம் பணத்தைத்திரும்பத் தருவதாகக் கூரியுள்ளார். பார்ப்போம்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement