பிரபல பாலிவுட் நடிகையும் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான ப்ரீத்தி ஜிந்தா தாயாகி இருக்கிறார். பாலிவுட் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் இந்தி ரசிகர்களின் கனவு கன்னிகளில் ஒருவராக விளங்கி வந்தவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. 1998 ஆம் ஆண்டு வெளியான ‘தில் சே’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழில் உயிரே என்ற தலைப்பில் வெளியாகி தமிழிலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலிவுடில் ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என்று பல முன்னணி நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
பாலிவுட் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேல் நடித்து வந்தாலும். இதுவரை இவர் 50 படங்களில் கூட நடிக்கவில்லை. அந்த அளவிற்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டை சேர்ந்த Gene Goodenough என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து கவ்ரவ வேடங்களில் நடித்துவந்தனர் .மேலும், சமீப காலமாக சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். அதே போல சமீப காலமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒய்வு பெற்றிருந்த இவர் , ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் நிறுவனராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் 46 வயதான இவர் இவர் surrogate மூலம் இரட்டை குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். surrogate என்றால் வேறு ஒன்றும் இல்லை வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தான். ஏற்கனவே பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, கடந்த ஆண்டு தன் இரண்டாம் குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.