இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை தனுஷ் நடித்துள்ள “வடசென்னை” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ இணைத்துள்ளது.
#STR wishes @dhanushkraja on his release of #VadaChennai film tomorrow #Simbu pic.twitter.com/0d5xXt03S8
— Kayal Devaraj (@devarajdevaraj) October 16, 2018
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் நடிகர் சிம்பு இந்த படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், என்னுடைய நண்பர் தனுஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே போல வெற்றிமாறன் மற்றும் படக்குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள். எங்களது சண்டை திரையில் மட்டுமே தவிர சமூக வலைத்தளங்களில் இல்லை. என்னுடைய ரசிகர்களும் இதுபோன்ற நல்ல படங்களை சப்போர்ட் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
நான் இப்போ படத்துல பண்ணிருக்க அன்பு கேரக்டரை சிம்பு பண்றதாகவும், படத்துல குமார்னு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் வருது, அத என்னைப் பண்ணச் சொல்லி கேட்டாங்க.நான் சொன்னேன், சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சிம்பு நடிக்க வேண்டியதை நடிகர் தனுஷ் தான் வேண்டாம் என்று கூறியிருந்தார் என்பதை சிம்பு அறிந்தும், பெருந்தனமையாக இந்த படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளது தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் சிம்புவிற்கு மேலும், நல்ல நல்ல மதிப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.