வந்த வேகத்தில் வீடு திரும்பிய அன்னபாரதி – பிக் பாஸ் கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
399
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அன்னபாரதி வாங்கி இருக்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 36 நாட்கள் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒருவர் வெளியேறுவது வழக்கம் தான். அந்த வகையில் முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி விட்டார். பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். அதற்கு பிறகு விஜய் வர்மா, யுகேந்திரன் மற்றும் வினுஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள். மேலும், கடந்த வாரம் 5 Wild கார்டு போட்டியாளர்கள் நுழைந்து இருந்தார்கள். அதில் கானா பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ் மற்றும் அன்னபாரதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் 7:

Wild Card போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்தே பிக் பாஸ் போட்டியாளர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருந்தார்கள். இதனால் Wild Card போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டார் டார்கட் செய்ய துவங்கிவிட்டனர். அதோடு Wild Card போட்டியாளர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றனர். இவர்களுடன் விசித்திராவும் சென்று இருக்கிறார். மேலும், இவர்களின் என்ட்ரி தங்களுக்கு விருப்பமில்லை என்று பிக் பாஸ் வீட்டில் உள்ள சிலர் Wild Card போட்டியாளர்களை நாமினேட் செய்யப்போகிறோம் என்று ஓப்பனாக கூறினார்கள்.

அன்னபாரதி வெளியேற்றம்:

அந்த வகையில் பாலா, அர்ச்சனா, பிராவோ, தினேஷ், அன்னபாரதி, அக்ஷ்யா, மணி,ஐஷு, மாயா ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தார்கள். மேலும், ரெட் கார்ட் கொடுத்து பிரதீப்பை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்கள். அதற்கு பின் எவிக்ஷன் இருக்காது என்று பலர் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால், குறைந்த வாக்குகள் அடிப்படையில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி தான் வெளியேறி இருக்கிறார். வந்த வேகத்திலேயே அன்ன பாரதி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு சென்று விட்டார். இவர் நிகழ்ச்சிக்குள் நுழைந்து ஒரு வாரம் தான் ஆகியிருக்கிறது. இருந்தாலும், இவர் வெளியேறி இருப்பது பலருக்கும் ஷாக் தான்.

-விளம்பரம்-

அன்னபாரதி சம்பளம்:

இவர் வெளியேறியதற்கு காரணம், பார்வையாளர்களை கவரவில்லை என்று கமலஹாசனும் சில உதாரணங்களை கூறியிருந்தார். இந்த நிலையில் அன்னபாரதி வாங்கிற்கும் சம்பளம் குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் அன்னபாரதிக்கு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இவர் ஏழு நாட்கள் நிகழ்ச்சியில் உள்ள இருந்ததால் 140000ரூபாய் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அன்னபாரதி குறித்த தகவல்:

அன்னபாரதி மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகை. இவருக்கு சிறு வயதிலிருந்தே படிப்பு, விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். பேச்சு போட்டி, எழுத்துப்போட்டி, கட்டுரை போட்டி, பாடல் போட்டி, நினைவாற்றல் போட்டி என பல போட்டிகள் பங்கேற்று பரிசும் பெற்று இருக்கிறார். இதனாலே தான் இவர் பட்டிமன்றத்தில் தேர்வு செய்து வந்தார். இவர் இந்தியா ரேடியோவில் சிசிஏவாக பணிபுரிந்தார். பின் இவர் முதன்முதலில் மக்கள் டிவியில் உரிமைக்குரல் என்ற நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பின் பட்டிமன்றங்கள் என்று பல நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருக்கிறார். சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெண் வர்ணனையாளராக அன்னபாரதி பங்கேற்றுந்தார்.

Advertisement