படத்தில் இருந்து விலகிய காரணம். பதிவை நீக்கிய திரிஷா. உண்மை காரணத்தை சொன்ன சிரஞ்சீவி.

0
964
Trisha
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா. இவர் சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பு இவர் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு பிரசாந்த்-சிம்ரன் நடிப்பில் வெளிவந்த ஜோடி என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for chiranjeevi trisha

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டும் இல்லாமல் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர். கடந்த ஆண்டு “ஹே ஜூட்” என்ற மலையாள படத்தில் திரிஷா நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றியடைய திரிஷாவிற்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர தொடங்கியள்ளது. இவர் தமிழில் விஜய் சேதுபதியுடன் 96 படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை தன்வசம் ஆக்கினார்.

இதையும் பாருங்க : ஒரே ஊரில் இருந்தும் பார்க்க முடியல – புகைப்படத்தை பகிர்ந்து தனுஷ் சகோதரி உருக்கம்

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் டோலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து திடீரென விலகியுள்ளார். இந்த தகவல் தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பரவி வருகிறது. நடிகை திரிஷா அவர்கள் தற்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற படத்தில் நடித்து வருகிறார். திரிஷ்யம் என்ற படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இதையும் பாருங்க : துப்பாக்கி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்த நடிகையா இது. வைரலாகும் புகைப்படம்.

-விளம்பரம்-

இதனிடையே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இருந்து தான் திரிஷா விலகி இருந்தார். இதுகுறித்து சமீபத்தில் சிரஞ்சீவி விளக்கமளித்துள்ளார். அதில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திற்கு திரிஷா மொத்தமாக தனது கால்ஷீட்டை கொடுத்துவிட்டார். அதனால் அவர் ஆச்சார்யா படத்தில் நடிக்கவில்லை. மற்றபடி படக்குழுவினருடன் அவருக்கு எந்தவித மனக்கசப்பும் இல்லை என சிரஞ்சீவி கூறியுள்ளார்.

ஏற்கனவே, இந்த படத்தில் இருந்து விலகிய காரணத்தை கூறி இருந்த திரிஷா, சில நேரங்களில் ஆரம்பத்தில் செல்வது ஒன்று, பின்னர் நடப்பது ஒன்றாக இருக்கிறது. படக்குழு உடனிருந்த சில கருத்து வேறுபாடு காரணமாக நான் இந்த படத்திலிருந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளேன். இந்த படம் நன்றாக வர படக்குழுவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் திரிஷா. ஆனால் , அந்த பதிவை ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளார் திரிஷா.

Advertisement